< Back
மாநில செய்திகள்
தூத்துக்குடியிவாலிபர் தீக்குளித்து சாவு
தூத்துக்குடி
மாநில செய்திகள்

தூத்துக்குடியிவாலிபர் தீக்குளித்து சாவு

தினத்தந்தி
|
22 Oct 2023 6:45 PM GMT

தூத்துக்குடியிவாலிபர் தீக்குளித்து இறந்து போனார்.

தூத்துக்குடி அண்ணாநகர் 3-வது தெருவை சேர்ந்தவர் திருப்பதி (வயது 33). இவர் குடும்ப பிரச்னை காரணமாக தனது குடும்பத்தை விட்டு தனியாக வசித்து வந்தாராம். இவர் நேற்று அதிகாலையில் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தாராம். அவர் ஆஸ்பத்திரிக்கு செல்லும் ரோட்டோரத்தில் திடீரென உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளித்து உள்ளார். இதில் உடல் கருகிய திருப்பதியை சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் தூத:தக்குடி தென்பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்