< Back
மாநில செய்திகள்
தூத்துக்குடி: பள்ளிக்குள் புகுந்து ஆசிரியர்கள் மீது தாக்குதல் நடத்திய கும்பலால் பரபரப்பு..!
மாநில செய்திகள்

தூத்துக்குடி: பள்ளிக்குள் புகுந்து ஆசிரியர்கள் மீது தாக்குதல் நடத்திய கும்பலால் பரபரப்பு..!

தினத்தந்தி
|
21 March 2023 3:25 PM GMT

தூத்துக்குடியில் பள்ளிக்குள் புகுந்து ஆசிரியர்கள் மீது தாக்குதல் நடத்தியும் பொருள்களை சேதப்படுத்திய கும்பலால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் கீழநம்பியார்புரத்தில் உள்ள தொடக்க பள்ளி ஒன்றில் சுமார் 100 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் இன்று மாலை ஆலோசனைக்கூட்டமானது நடைபெற்றுள்ளது.

அப்போது அதே பள்ளியில் 2ம் வகுப்பு படிக்கும் மாணவன் பிரகதீஸ்வரனை பள்ளி தலைமை ஆசிரியர் தாக்கியதாக மாணவனின் தாத்தா முனியசாமி ஆசிரியர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அப்போது முனியசாமியும், அவரது உறவினர்களும், தலைமை ஆசிரியரையும், சக ஆசிரியர்களையும் தாக்கியுள்ளனர். மேலும், பள்ளியில் இருந்த மேசை, நாற்காலி மற்றும் புத்தகங்களையும் சேதப்படுத்தியுள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்திவருகின்றனர்.

மேலும் செய்திகள்