< Back
மாநில செய்திகள்
அம்மன் கோவில்களில் திருவிளக்கு பூஜை
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

அம்மன் கோவில்களில் திருவிளக்கு பூஜை

தினத்தந்தி
|
12 Aug 2022 7:14 PM GMT

அம்மன் கோவில்களில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

புதுக்கோட்டை சாந்தநாதசுவாமி கோவிலில் ஆடி கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி திருவிளக்கு பூஜையும், வடக்கு 3-ம் வீதி மகிமைநாயகி முத்துமாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை மற்றும் அன்னதானம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். கறம்பக்குடி முருகன் கோவிலில் வள்ளி தேவசேனா சமேத முருகபெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதேபோல் மழையூர், பொன்னன் விடுதி, முள்ளங்குறிச்சி, வடக்களூர் ஆகிய பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

அறந்தாங்கி அருகே இடையன்கோட்டை முத்துமாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. பொன்னமராவதி அருகே உள்ள பொன்-புதுப்பட்டி உடையபிராட்டி அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடைபெற்றது. இதையடுத்து காலை மற்றும் மாலையில் 1,001 பெண்கள் கலந்து கொண்டு திருவிளக்கு பூஜையில் ஈடுபட்டனர். கீரமங்கலம் அருகே உள்ள சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள அம்மன் கோவில்களில் ஆடி கடைசி வெள்ளியையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதேபோல் கொத்தமங்கலம் கிராம காவல் தெய்வமான முத்துமாரியம்மன் கோவிலில் நேற்று 100-க்கும் மேற்பட்ட பெண்கள் திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்