< Back
மாநில செய்திகள்
மதுரை
மாநில செய்திகள்
உலக நன்மைக்காக திருவிளக்கு பூஜை
|10 Dec 2022 7:08 PM GMT
அலங்காநல்லூர் சித்தி விநாயகர் ேகாவிலில் உலக நன்மைக்காக திருவிளக்கு பூஜை நடந்தது.
அலங்காநல்லூர்,
அலங்காநல்லூர் தெப்பக்குளத்தில் உள்ள சித்தி விநாயகர், சீனிவாசபெருமாள், சுப்ரமணிய சுவாமி கோவில்களில் திருவிழா 2 நாட்கள் நடந்தது. திருவிழாவையொட்டி கோவில் வளாகத்தில் உலக நன்மைக்காக கணபதி ஹோமம், 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பின்னர் சுவாமி புறப்பாடும் நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு நெய் விளக்கேற்றி வழிபட்டனர்.திருவிழா ஏற்பாடுகளை கோவில் அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.