< Back
மாநில செய்திகள்
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்
வண்டுறை மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை
|31 Aug 2022 6:04 PM GMT
வண்டுவாஞ்சேரி வண்டுறை மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை
வாய்மேடு:
நாகை மாவட்டம் வாய்மேடு அருகே வண்டுவாஞ்சேரியில் உள்ள வண்டுறை மாரியம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை நடந்தது. இதையொட்டி மாரியம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், திருநீறு, திரவியம் உள்ளிட்டவற்றால் அபிஷேகம் நடந்தது. பின்னர் சந்தனக்காப்பு அலங்காரத்துடன் தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். திருவிளக்கு பூஜையையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் விழா குழுவினர் செய்து இருந்தனர்.