< Back
மாநில செய்திகள்
மகா மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை
கரூர்
மாநில செய்திகள்

மகா மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை

தினத்தந்தி
|
14 Aug 2022 6:51 PM GMT

மகா மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது.

தோகைமலை அருகே உள்ள வெள்ளைப்பட்டியில் பிரசித்தி பெற்ற மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு பால், பழம், விபூதி, சந்தனம் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து மகா மாரியம்மன் சந்தன காப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். அதன்பின்னர் கோவில் வளாகத்தில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு குத்து விளக்கை ஏற்றி பயபக்தியுடன் அம்மனை வழிபட்டனர். இதில், விழாக்கமிட்டியினர், ஊர் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்