< Back
மாநில செய்திகள்
மெய்கண்டார் கோவிலில் திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி
விழுப்புரம்
மாநில செய்திகள்

மெய்கண்டார் கோவிலில் திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி

தினத்தந்தி
|
17 July 2022 5:59 PM GMT

திருவெண்ணெய்நல்லூர் மெய்கண்டார் கோவிலில் திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருவெண்ணெய்நல்லூர்,

திருவெண்ணெய்நல்லூரில் பிரசித்தி பெற்ற மெய்கண்டார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தேவார திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி ஸ்ரீமத் திருச்சிற்றம்பல தம்பிரான் சுவாமிகள் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் நெய்வேலி, கடலூர், விழுப்புரம், திருக்கோவிலூர், உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட சிவனடியார்கள் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை நெய்வேலி சிவதிருகனமுருகப்பன், விஜயலட்சுமி குப்புசாமி, புதுப்பேட்டை மார்த்தாண்டம் ஆகியோர் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்