< Back
மாநில செய்திகள்
திருவள்ளூர்: 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வெற்றி
மாநில செய்திகள்

திருவள்ளூர்: 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வெற்றி

தினத்தந்தி
|
4 Jun 2024 3:16 PM GMT

திருவள்ளூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் இமால வெற்றியை பதிவு செய்துள்ளார்.

திருவள்ளூர்,

தமிழ்நாட்டில் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என 40 தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 19-ந் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. ஆகிய கட்சிகள் கூட்டணியிட்டும், நாம் தமிழர் கட்சி தனித்தும் களம் கண்டது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 39 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், திருவள்ளூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் இமால வெற்றியை பதிவு செய்துள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட தேமுதிக , பாஜக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை தோற்கடித்து வரலாறு காணாத வெற்றியை பெற்றார் சசிகாந்த்.

இவரை எதிர்த்துபோட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் நல்லதம்பியைவிட 5 லட்சம் வாக்குகள் அதிகமாக பெற்று சசிகாந்த் இமால வெற்றியை பதிவு செய்துள்ளார்.

சசிகாந்த் செந்தில் (காங்கிரஸ்) - 7,91,008

நல்லதம்பி (தேமுதிக) - 2,22,656

பாலகணபதி (பாஜக) - 2,22,409

ஜெகதீஷ் சந்தர் (நாதக) - 1,19,902

மேலும் செய்திகள்