< Back
மாநில செய்திகள்
திருத்தணி முருகன் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.1¼ கோடி வசூல் - 100 பவுன் தங்கமும் கிடைத்தது
திருவள்ளூர்
மாநில செய்திகள்

திருத்தணி முருகன் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.1¼ கோடி வசூல் - 100 பவுன் தங்கமும் கிடைத்தது

தினத்தந்தி
|
26 May 2022 8:57 AM GMT

கடந்த 1 மாதத்தில் திருத்தணி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.1¼ கோடி வசூலானது. 100 பவுன் தங்கமும் கிடைத்தது.

திருத்தணி சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற ஐந்தாம் படை திருத்தலமாகும். இந்த திருக்கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிருந்தும், அண்டை மாநிலங்களிருந்தும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். பக்தர்கள் அனைவரும் மலைக்கோவிலில் மூலவர் முருகப்பெருமானை தரிசனம் செய்துவிட்டு காணிக்கையாக உண்டியலில் பணம், நகை, ஆகியவற்றை செலுத்துகிறார்கள்.

பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்தப்படும் உண்டியல் பணம், இதேபோல் திருத்தணி முருகன் கோவில் உடன் இணைந்த 30 உப கோவில்கள் உண்டியல் பணம் அனைத்தையும் எண்ணுவதற்கு தமிழக இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அவர்களிடம் அனுமதி பெற வேண்டும்.

அவ்வாறு அனுமதி பெற்றவுடன் திருத்தணி முருகன் கோவில் நிர்வாகம் மலைக்கோவிலில் தேவர் மண்டபத்தில் கோவில் துணை ஆணையர், செயல் அலுவலர் விஜயா, கோவில் தக்கார் ஜெயப்பிரியா ஆகியோர் முன்னிலையில் கோவில் பணியாளர்களைக் கொண்டு உண்டியல் காணிக்கை எண்ணும் பணி 2 நாட்களாக நடைபெற்றது.

இதில் 36 நாள் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.1 கோடியே 22 லட்சத்து 83 ஆயிரத்து 57 வருவாயாக கிடைத்தது. மேலும் தங்கம் 832 கிராம், வெள்ளி 12 ஆயிரத்து 224 கிராம் காணிக்கையாக செலுத்தப்பட்டிருப்பதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்