< Back
மாநில செய்திகள்
பெரம்பலூர் மதனகோபாலசுவாமி கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
பெரம்பலூர்
மாநில செய்திகள்

பெரம்பலூர் மதனகோபாலசுவாமி கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

தினத்தந்தி
|
3 April 2023 8:23 PM GMT

பெரம்பலூர் மதனகோபாலசுவாமி கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.

பெரம்பலூரில் பிரசித்தி பெற்ற மதனகோபால சுவாமி கோவிலின் பங்குனி உத்திர திருவிழா கடந்த 28-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழா நாட்களில் ஒவ்வொரு நாளும் காலையிலும் சுவாமி பல்லக்கிலும், இரவில் ஒவ்வொரு வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்தார். திருவிழாவின் 7-ம் நாளான நேற்று மாலை கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. உற்சவர் பெருமாளுக்கு ஸ்ரீதேவி, பூதேவியுடன் திருக்கல்யாண உற்சவம் நடத்தப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு திருக்கல்யாண உற்சவத்தை கண்டுகளித்ததோடு, பெருமாளை பயபக்தியுடன் தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இன்று (செவ்வாய்க்கிழமை) காலை வெண்ணெய் தாழி உற்சவமும், இரவில் பெருமாள் குதிரை வாகனத்தில் வீதி உலாவும் நடக்கிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை (புதன்கிழமை) நடக்கிறது. அதனை முன்னிட்டு காலை 9 மணி முதல் 9.30 மணிக்குள் ராதா ரோஹனம் நடக்கிறது. பின்னர் காலை 10 மணி முதல் 10.30 மணிக்குள் தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. இரவில் தீர்த்தவாரி நடக்கிறது. வருகிற 9-ந்தேதியுடன் மஞ்சள் நீர் விடையாற்றியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

மேலும் செய்திகள்