< Back
மாநில செய்திகள்
தமிழகத்தில் வட மாநிலத்தவர்களுக்கு எந்த நெருக்கடியும் இல்லை -  கூடுதல் காவல் ஆணையர்
மாநில செய்திகள்

தமிழகத்தில் வட மாநிலத்தவர்களுக்கு எந்த நெருக்கடியும் இல்லை - கூடுதல் காவல் ஆணையர்

தினத்தந்தி
|
4 March 2023 9:26 AM GMT

தொடர்ந்து சமூக வலைதளங்களை கண்காணித்து வருகிறோம் . என தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் வட மாநிலத்தவர்களுக்கு எந்த நெருக்கடியும் இல்லை ,கூடுதல் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா தெரிவித்துள்ளார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த சென்னை தெற்கு கூடுதல் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா கூறியதாவது ,

வட மாநில தொழிலாளர் விவகாரத்தில் தவறான தகவல் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் .சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும்.வட மாநில தொழிலாளர்கள் வேலை செய்யும் இடத்திற்கே சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளோம் . போலி வீடியோக்களை நம்ப வேண்டாம் என்று வட மாநிலத்தவர்களிடம் தெரிவித்துள்ளோம்

தற்போது வரை தமிழகத்தில் வட மாநிலத்தவர்களுக்கு எந்த நெருக்கடியும் இல்லை.சைபர் கிரைம் மூலம் தொடர்ந்து சமூக வலைதளங்களை கண்காணித்து வருகிறோம் . என தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்