< Back
மாநில செய்திகள்
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடத்த தடை இல்லை -   மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
மாநில செய்திகள்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடத்த தடை இல்லை - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

தினத்தந்தி
|
12 Jan 2024 10:50 AM GMT

ஜல்லிக்கட்டு போட்டியின்போது இடையூறு செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என்று ஐகோர்ட்டு மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை,

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை அனைத்து சமூகங்களையும் ஒருங்கிணைத்து கமிட்டி அமைத்து நடத்த கோரிய வழக்கின் விசாரணை ஐகோர்ட்டு மதுரை கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை, மதுரை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி இணைந்து நடத்த எந்த தடையும் இல்லை என்றும் போட்டியின்போது தனிநபர்களோ, மாவட்ட நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட குழுவில் இல்லாதவர்களோ எந்த பிரச்சனை, இடையூறு செய்யக்கூடாது என்றும் கூறினர்.

ஜல்லிக்கட்டு போட்டியின்போது இடையூறு செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என்று ஐகோர்ட்டு மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மேலும் செய்திகள்