< Back
மாநில செய்திகள்
தாழ்வாக உள்ள ரெயில்வே கேட்டால் விபத்து ஏற்படும் அபாயம்
திருவாரூர்
மாநில செய்திகள்

தாழ்வாக உள்ள ரெயில்வே கேட்டால் விபத்து ஏற்படும் அபாயம்

தினத்தந்தி
|
11 Jun 2023 6:45 PM GMT

தாழ்வாக உள்ள ரெயில்வே கேட்டால் விபத்து ஏற்படும் அபாயம்

முத்துப்பேட்டையில் தாழ்வாக உள்ள ரெயில்வே கேட்டால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பழமை வாய்ந்த ரெயில் நிலையம்

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ெரயில்வே நிலையம் பழமை வாய்ந்ததாகும். ஆங்கிலேயர் ஆட்சியில் உருவாக்கப்பட்ட இந்த ெரயில்வே நிலையம் மூலம் இந்த பகுதியில் உள்ள தர்கா மற்றும் தில்லைராமர் கோவில், பல்வேறு வழிப்பாட்டு தலங்கள், லகூன் மற்றும் அலையாத்திகாடுகள் உள்பட சுற்றுலா தலங்களால் ஒரு காலத்தில் ெரயில்வே துறைக்கு அதிக லாபத்தை பெற்று தந்துள்ளது. கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு அகல ெரயில் பாதை பணிக்காக இந்த பகுதிக்கு வந்த ெரயில்கள் நிறுத்தப்பட்டன. அதனைதொடர்ந்து பணிகள் தொடங்கி முழுவீச்சில் நடந்து முடிந்தது. கடந்த ஆண்டு முதல் திருவாரூர்- காரைக்குடி ெரயில் மற்றும் தொலைதூர ெரயில்களும் சென்று வருகிறது.

ரெயில்வே கேட்

இதில் ெரயில்வே நிலையம் அருகே செல்லும் மன்னார்குடி சாலையில் ஒரு ெரயில்வே கேட் உள்ளது. இதில் ெரயில் வரும் நேரத்தில் கேட் மூடி இருப்பதால் அதிகளவில் வாகனங்கள் அணிவகுத்து நிற்பதை தவிர்க்கும் வகையில் சுமார் 15ஆண்டுக்கு முன்பு இப்பகுதியில் ெரயில்வே மேம்பாலம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

பின்னர் அந்த பணிகள் நடைபெறவில்லை. தற்போது இந்த பகுதியில் அதிகளவில் ெரயில் போக்குவரத்து வர தொடங்கி உள்ளது. இதனால் இந்த ெரயில்வே கேட் பகுதியில் ெரயில் வரும் நேரத்தில் வழக்கத்துக்கு மாறாக நூற்றுக்கணக்கான வாகனங்கள் காத்துக்கிடக்கிறது. இந்த ரெயில்வே கேட் மிகவும் தாழ்வாக உள்ளதால் ரெயில் வரும் போது உயர்த்தும் போதும், தாழ்த்தும் போதும் விபத்து ஏற்பட அபாயம் உள்ளது.

உயர்த்தி நிறுத்த வேண்டும்

நேற்று மதியம் இந்த பகுதியில் சரக்கு ெரயில் ஒன்று சென்றது. அப்போது இந்த ெரயில்வே கேட் மூடப்பட்டது. அப்போது ெரயில் சென்றதும் கேட் கீப்பர் ெரயில்வே கேட்டை திறந்தார். அப்போது கேட் மேல்நோக்கி சென்றுக்கொண்டிருந்தது. அதனை வாகனங்களும் கடந்து சென்றது. திடீரென்று மேல்நோக்கி சென்ற கேட் கீழே இறங்கி தாழ்வாக நின்றது. இதனால் அப்பகுதியை கடக்க இருந்த அரசு பஸ் கேட்டின் மீது மோத போனது. டிரைவரின் சமார்த்தியதால் அந்த விபத்து தவிர்க்கப்பட்டது.

எனவே விபத்துக்கள் நடக்கும் முன் தாழ்வாக உள்ள முத்துப்பேட்டை ரெயில்வே கேட்டை உடனடியாக சீரமைத்து உயர்த்தி நிறுத்த முன் வரவேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
மேலும் செய்திகள்