< Back
மாநில செய்திகள்
தேரழுந்தூர் ஆமருவி பெருமாள் கோவிலில் தெப்ப உற்சவம்‌
மயிலாடுதுறை
மாநில செய்திகள்

தேரழுந்தூர் ஆமருவி பெருமாள் கோவிலில் தெப்ப உற்சவம்‌

தினத்தந்தி
|
8 Oct 2022 6:45 PM GMT

தேரழுந்தூர் ஆமருவி பெருமாள் கோவிலில் தெப்ப உற்சவம்‌

தேரழுந்தூர் ஆமருவி பெருமாள் கோவிலில் தெப்ப உற்சவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தெப்ப உற்சவம்

குத்தாலம் தாலுகா தேரழுந்தூர் கிராமத்தில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான ஆமருவியப்பன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் தேசிகர் உற்சவத்தையொட்டி பெருமாள் தெப்ப உற்சவம் நடைபெறும். இந்த ஆண்டுக்கான தேசிகர் உற்சவத்தையொட்டி நேற்றுமுன்தினம் கோவில் குளத்தில் பெருமாள் தெப்ப உற்சவம் நடைபெற்றது. நேற்று தேசிகர் தெப்ப உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக பெருமாள் மற்றும் தேசிகருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சுந்தர்ராஜன் செய்திருந்தார். பாதுகாப்பு பணியில் குத்தாலம் போலீசார் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்