< Back
மாநில செய்திகள்
ராணுவ வீரர், சப்-இன்ஸ்பெக்டர் வீடுகளில் நகை, பணம் திருட்டு
ராணிப்பேட்டை
மாநில செய்திகள்

ராணுவ வீரர், சப்-இன்ஸ்பெக்டர் வீடுகளில் நகை, பணம் திருட்டு

தினத்தந்தி
|
26 Nov 2022 1:22 PM GMT

சோளிங்கர் அருகே ராணுவ வீரர், சப்-இன்ஸ்பெக்டர் வீடுகளில் நகை, பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

சோளிங்கர்

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அருகே கூடலூர் கிராமத்தை சேர்ந்தவர் குப்புராஜ், முன்னாள் ராணுவ வீரர்.

இவரது வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் பூட்டை உடைத்து வீட்டில் இருந்த 10 பவுன் நகைகள், அரை கிலோ வெள்ளி, ரூ.20 ஆயிரம் ரொக்கம் மற்றும் பூஜை அறையில் இருந்த உண்டியலையும் திருடி சென்று உள்ளனர்.

தொடர்ந்து அருகே இருந்த சென்னையில் பணிபுரியும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குமார் என்பவரின் வீட்டின் பூட்டையும் உடைத்து நகை, பணத்தை திருடிச்சென்றுள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கொண்டபாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

அருகருகே வீடுகளில் நடந்த இந்த திருட்டு சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.



மேலும் செய்திகள்