< Back
மாநில செய்திகள்
செங்கல்பட்டு
மாநில செய்திகள்
வீட்டின் பூட்டை உடைத்து 19 பவுன் நகை திருட்டு
|5 Aug 2022 9:27 AM GMT
ஊரப்பாக்கத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 19 பவுன் நகையை மர்மநபர்கள் திருடி சென்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் குலசேகர அவென்யூ பகுதியை சேர்ந்தவர் சோபியா (வயது 29). இவர் சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் நிறுவனத்தி்ல் பணிபுரிந்து வருகிறார். இவரின் வீட்டில் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதாக அக்கம் பக்கத்தினர் சோபியாவுக்கு தகவல் தெரிவித்தனர்.உடனடியாக அவர் வீட்டுக்கு வந்து பார்த்தார். அப்போது வீட்டுக்குள் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 19 பவுன் தங்க நகை திருட்டு போனது தெரிய வந்தது.
இது குறித்து அவர் கூடுவாஞ்சேரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.