< Back
மாநில செய்திகள்
தீக்குளித்த வாலிபர் சாவு
விருதுநகர்
மாநில செய்திகள்

தீக்குளித்த வாலிபர் சாவு

தினத்தந்தி
|
10 Aug 2023 6:45 PM GMT

தீக்குளித்த வாலிபர் சாவு இறந்தார்.

விருதுநகர் இந்திரா நகரை சேர்ந்தவர் லட்சுமி. இவரது மகன் சஞ்சய் குமார்(வயது 21). திருமணம் முடிந்த இவர் தாயாருடன் வசித்து வந்தார். இந்நிலையில் தினசரி மது போதையில் வந்து பிரச்சினை செய்தாராம். அவரை குடும்பத்தினர் கண்டித்தபோது தற்கொலை செய்துகொள்வதாக மிரட்டியதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று மது போதையில் வந்த சஞ்சய் குமார் உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்து கொண்டதாக கூறப்படுகிறது. பலத்த தீக்காயங்களுடன் விருதுநகர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார். இதுகுறித்து விருதுநகர் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்