< Back
மாநில செய்திகள்
சிகரெட் சாம்பல் கண்ணில் பட்டதை தட்டிக் கேட்ட வாலிபர் அடித்து கொலை...!
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

சிகரெட் சாம்பல் கண்ணில் பட்டதை தட்டிக் கேட்ட வாலிபர் அடித்து கொலை...!

தினத்தந்தி
|
8 Jun 2022 11:26 AM GMT

கும்பகோணத்தில் சிகரெட் சாம்பல் கண்ணில் பட்டதை தட்டிக்கேட்ட வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.


தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தை அடுத்த கொட்டையூர் பகுதியை சேர்ந்தவர் செந்தில். இவரது மகன் பிரகாஷ் (வயது 22). இவர் நேற்று தனது நண்பர் சந்தோஷ் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வளையப்பேட்டை வழியாக சென்று கொண்டிருந்தார்.

அப்போது, இவர்களுக்கு முன்னால் சிகரெட்டை புகைத்தபடி ஒருவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அவரது சிகரெட்டின் சாம்பல், பின்னால் மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த பிரகாஷ் நண்பர் சந்தோஷ் கண்ணில் பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த பிரகாஷ் மற்றும் சந்தோஷ் இருவரும் முன்னால் சென்று கொண்டிருந்த நபரை வழிமறித்து நிறுத்தி தட்டிக் கேட்டுள்ளனர்.

இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றி தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் பிரகாஷ் மற்றும் சந்தோஷ் இருவரும் சேர்ந்து புகை பிடித்த நபரை தாக்கியுள்ளனர். அடிவாங்கிய நபர் செல்போன் மூலம் தனது நண்பர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார். உடன் சம்பவ இடத்திற்கு வந்த புகைபிடித்த நபரின் கூட்டாளிகள் பிரகாஷ் மற்றும் சந்தோஷை சரமாரி தாக்கியுள்ளனர்.

இதில் படுகாயமடைந்த பிரகாஷ் சம்பவ இடத்திலேயே உயிரழந்தார். இந்த சம்பவம் குறித்து சந்தோஷ் கொடுத்த புகாரின் பேரில் கும்பகோணம் தாலுக்கா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்