< Back
மாநில செய்திகள்
மாடியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு
கடலூர்
மாநில செய்திகள்

மாடியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு

தினத்தந்தி
|
2 Oct 2023 7:01 PM GMT

மாடியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி இறந்தார்.

விருத்தாசலம்,

பீகார் மாநிலம் ரகுடா காம், கவுர் பஜாரை சேர்ந்தவர் சுமித் குமார் (வயது 21). சம்பவத்தன்று இவர் விருத்தாசலம் கடைவீதியில் உள்ள தனியார் கட்டிடத்தில் வேலை செய்துவிட்டு, மாலை நேரத்தில் முதலாவது மாடியில் இருந்து போன் பேசிக் கொண்டிருந்ததாக தெரிகிறது. அப்போது எதிர்பாராதவிதமாக கால்தவறி மாடியில் இருந்து கீழே விழுந்துள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி நேற்று முன்தினம் சமித்குமார் இறந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்