< Back
மாநில செய்திகள்
கரூர்
மாநில செய்திகள்
மயங்கி விழுந்து தொழிலாளி சாவு
|8 Sep 2023 6:46 PM GMT
மயங்கி விழுந்து தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
நாமக்கல் மாவட்டம், மோகனூர் அருகே உள்ள ஊஞ்சபாளையம் காலனியை சேர்ந்தவர் கந்தன் (வயது 48). கூலி தொழிலாளி. இவர் சம்பவத்தன்று மலையம்பாளையத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது கந்தன் திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு கந்தனை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து வாங்கல் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.