< Back
மாநில செய்திகள்
மின்கம்பங்கள் அமைக்கும் பணி தீவிரம்
விருதுநகர்
மாநில செய்திகள்

மின்கம்பங்கள் அமைக்கும் பணி தீவிரம்

தினத்தந்தி
|
16 July 2022 7:16 PM GMT

ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் மின்கம்பங்கள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் மழை மற்றும் பலத்த காற்றின் போது மின் கம்பங்கள் சாய்வதால் மின்சாரம் அதிக நேரம் தடை ஏற்பட்டது. அதனை தவிர்க்கும் பொருட்டு உயர் மின் கம்பிகள் செல்லும் பாதையில் கூடுதலாக மின் கம்பங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியினை கோட்ட பொறியாளர் சின்னத்துரை பார்வையிட்டார். அப்போது அவர் கூறுகையில் இனி வருகின்ற மழை மற்றும் புயல்நாட்களில் மின்சாரம் தடைபடாது. அதற்கான அனைத்து முன்னேற்பாடு பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது என்றார்.


மேலும் செய்திகள்