< Back
மாநில செய்திகள்

ஈரோடு
மாநில செய்திகள்
விஷம் குடித்து சிகிச்சை பெற்று வந்த பெண் சாவு

8 Oct 2022 3:22 AM IST
விஷம் குடித்து சிகிச்சை பெற்று வந்த பெண் பாிதாபமாக இறந்தாா்.
கடத்தூர்
கோபி அருகே உள்ள தாழ்குனியை சேர்ந்தவர் சிவானந்தகுமார். இவருடைய மனைவி சத்திய சுந்தரி (வயது 35). விவசாயி. சத்திய சுந்தரி அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் உடல் நலம் குணமாகவில்லை. இதனால் சத்திய சுந்தரி மனமுடைந்து சம்பவத்தன்று விஷம் குடித்து வீட்டில் மயங்கி விழுந்தார். இதை கண்டதும் அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கோபியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். இதுகுறித்து சிறுவலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.