< Back
மாநில செய்திகள்
ஈரோடு
மாநில செய்திகள்
மது விற்ற பெண் கைது
|28 Sep 2023 10:43 PM GMT
மது விற்ற பெண் கைது செய்யப்பட்டாா்
மது விற்ற பெண் கைது
டி.என்.பாளையம் கள்ளிப்பட்டி அருகே உள்ள பெருமுகை ஊராட்சி ஏரங்காட்டூர் பகுதியில் பங்களாப்புதூர் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு பெண் ஒருவர் மது விற்று கொண்டிருந்தார். அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் அவர் ஏரங்காட்டூர் பத்மா நகரை சேர்ந்த சின்னப்பிள்ளை (வயது 52) என்பதும், அவர் சட்ட விரோதமாகபாட்டில்களை விற்பனைக்கு வைத்திருந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சின்னப்பிள்ளையை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 7 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.