< Back
மாநில செய்திகள்
கிணற்றில் குதித்த பெண் சாவு
கரூர்
மாநில செய்திகள்

கிணற்றில் குதித்த பெண் சாவு

தினத்தந்தி
|
12 Aug 2023 6:40 PM GMT

கிணற்றில் குதித்த பெண் பரிதாபமாக இறந்தார்.

தோகைமலை அருகே உள்ள கவுண்டம்பட்டியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி கன்னியம்மாள் (வயது 43). இவர் உடல்நல குறைவால் கடந்த 6 மாதங்களாக அவதி அடைந்து வந்துள்ளார். இதனால் திருச்சி அரசு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை எடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினமும் அவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த கன்னியம்மாள் நேற்று முன்தினம் இரவு கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.

இதையடுத்து முசிறி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து கன்னியம்மாளை பிணமாக மீட்டனர். பின்னர் தோகைமலை போலீசார் கன்னியம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து தோகைமலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்