< Back
மாநில செய்திகள்
கீழே தள்ளி விட்டதால் மயங்கி விழுந்த பெண் சாவு
கடலூர்
மாநில செய்திகள்

கீழே தள்ளி விட்டதால் மயங்கி விழுந்த பெண் சாவு

தினத்தந்தி
|
22 Aug 2023 6:45 PM GMT

பரங்கிப்பேட்டை அருகே கீழே தள்ளி விட்டதால் மயங்கி விழுந்த பெண் பரிதாபமாக இறந்தார்.

பரங்கிப்பேட்டை

பரங்கிப்பேட்டை அருகே உள்ள சி.புதுப்பேட்டை மீனவர் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் மனைவி தனலட்சுமி(வயது 60). இவரது மருமகன் இளையகுமார் அதே ஊரை சேர்ந்த குப்பன் என்பவரிடம் 2 வருடங்களுக்கு முன்பு வட்டிக்கு ரூ.2 லட்சம் கடன் வாங்கியதாக தெரிகிறது. இந்த நிலையில் இளையகுமார் கடந்த 2 மாதங்களாக வட்டிப்பணம் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து குப்பன் இளையகுமாரின் மனைவி சுமதியை செல்போனில் தொடர்பு கொண்டு வட்டி பணம் கேட்டு அசிங்கமாக திட்டியதாக கூறப்படுகிறது. இதை சுமதி அவரது தாய் தனலட்சுமியிடம் கூறி அழுதார். பின்னர் தனது வீட்டின் வழியாக வந்த குப்பனிடம் தனலட்சுமி தட்டி கேட்டபோது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த குப்பன் தனலட்சுமியை கையால் நெட்டி தள்ளினார். இதில் கீழே விழுந்து மயங்கிய அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே தனலட்சுமி பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் பரங்கிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து குப்பன் கீழே தள்ளி விட்டதால் தனலட்சுமி இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Tags :
மேலும் செய்திகள்