< Back
மாநில செய்திகள்
மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து 30,723 கன அடியாக குறைவு
மாநில செய்திகள்

மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து 30,723 கன அடியாக குறைவு

தினத்தந்தி
|
24 July 2022 1:11 PM GMT

மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 30,500 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

சேலம்,

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்தி அதிகரித்தது. கடந்த 16-ம் தேதி மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. இதையடுத்து அணைக்கு வரும் நீர் முழுவதும் காவிரி ஆற்றில் உபரி நீராக வெளியேற்றப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்றைய தினம் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 35,237 கன அடியாக இருந்த நிலையில், இன்று நீர்வரத்து வினாடிக்கு 30,723 கன அடியாக குறைந்துள்ளது. அணையில் இருந்து மதகுகள் வழியாக வினாடிக்கு 7 ஆயிரம் கன அடியும், நீர்மின் நிலையங்கள் வழியாக விநாடிக்கு 23 ஆயிரம் கனஅடி நீரும் உபரியாக வெளியேற்றப்படுகிறது.

அதே போல் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 500 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணை நீர்மட்டம் 120.24 அடியாக உள்ளது. அணையில் நீர் இருப்பு 93.85 டி.எம்.சி.யாக உள்ளது.

மேலும் செய்திகள்