< Back
மாநில செய்திகள்
சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி சாவு
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி சாவு

தினத்தந்தி
|
6 July 2023 6:45 PM GMT

சங்கராபுரம் அருகே சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி சாவு

சங்கராபுரம்

சங்கராபுரம் அருகே உள்ள வடசெட்டியந்தல் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன்(வயது 53). கட்டிட தொழிலாளியான இவர் தனது வீட்டின் முன்பு மழைநீர் தேங்குவதை தடுக்க தரைத்தளம் அமைப்பதற்காக பள்ளம் தோண்டினார். அப்போது எதிர்பாராதவிதமாக வீட்டின் பக்கவாட்டு சுவர் இடிந்து வெங்கடேசன் மீது விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இது பற்றிய தகவல் அறிந்து வந்த சங்கராபுரம் போலீசார் இடிபாடுகளை அகற்றி பலியான வெங்கடேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது மனைவி குமுதவள்ளி(44) கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் லோகேஸ்வரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்