< Back
மாநில செய்திகள்
அரசு பஸ்சை சிறைபிடித்த கிராம மக்கள்
திருநெல்வேலி
மாநில செய்திகள்

அரசு பஸ்சை சிறைபிடித்த கிராம மக்கள்

தினத்தந்தி
|
16 April 2023 8:53 PM GMT

அம்பை அருகே அரசு பஸ்சை கிராம மக்கள் சிறைபிடித்தனர்.

அம்பை:

அம்பை அருகே அரசு பஸ்சை கிராம மக்கள் சிறைபிடித்தனர்.

அரசு பஸ் சிறைபிடிப்பு

அம்பையில் இருந்து தெற்கு பாப்பாங்குளம், அயன் சிங்கம்பட்டி, ஜமீன் சிங்கம்பட்டி வழியாக மணிமுத்தாறுக்கு இயக்கப்பட்ட அரசு பஸ்கள் கடந்த சில நாட்களாக சரிவர இயக்கப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள், மாணவ-மாணவிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.

இந்த நிலையில் நேற்று அம்பையில் இருந்து மணிமுத்தாறுக்கு சென்ற அரசு பஸ் தெற்கு பாப்பாங்குளம் வழியாக சென்றபோது, அப்பகுதி மக்கள் அந்த பஸ்சை சிறைபிடித்து சாலையில் அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

போக்குவரத்து பாதிப்பு

உடனே அம்பை துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் அரசு போக்குவரத்து கழக பணிமனை அதிகாரிகளும் செல்போனில் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது தினமும் பஸ்களை இயக்க நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தனர்.

இதையடுத்து சிறைபிடிக்கப்பட்ட பஸ்சை விடுவித்த கிராம மக்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த வழியாக சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்