< Back
மாநில செய்திகள்
கண்மாயில் இறங்கி உற்சாகமாக மீன்களை அள்ளிய கிராம மக்கள்
மதுரை
மாநில செய்திகள்

கண்மாயில் இறங்கி உற்சாகமாக மீன்களை அள்ளிய கிராம மக்கள்

தினத்தந்தி
|
29 May 2022 9:37 PM GMT

கொட்டாம்பட்டி அருகே மீன்பிடி திருவிழாவில் கண்மாயில் இறங்கி உற்சாகமாக மீன்களை கிராம மக்கள் அள்ளினர்.

கொட்டாம்பட்டி,

கொட்டாம்பட்டி அருகே உள்ள சொக்கம்பட்டியில் பாரம்பரியமிக்க மீன்பிடி திருவிழா நடைபெற்றது. அங்குள்ள கண்மாய் 10 வருடங்களுக்கு பிறகு பருவமழையால் கடந்தாண்டு நிரம்பியது.கிராமத்தினர் மீன் குஞ்சுகளை விலைக்கு வாங்கி கண்மாயில் விட்டு வளர்த்தனர் தற்போது கண்மாயில் தண்ணீர் குறைந்து விட்டதால் மீன்பிடி திருவிழா நடத்த முடிவு செய்து பக்கத்து கிராமங்களுக்கு ஒலி பெருக்கி மூலமாக தகவல் தெரிவித்தனர்.இதனை தொடர்ந்து சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து 10-க்கும் மேற்ப்பட்ட கிராமத்தினர் அதிகாலையே கண்மாய்க்கு வந்தடைந்தனர். கிராம முக்கியஸ்தர்கள் கோவிலில் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். பின்னர் கண்மாயில் கரையில் நின்று வெள்ளை கொடியை வீசியதை தொடர்ந்து பொதுமக்கள் மீன்பிடி உபகரணங்களான கச்சா, வலை, ஊத்தா உள்ளிட்டவைகளை கொண்டு கண்மாய்க்குள் இறங்கினர். அப்போது நாட்டுவகை மீன்களான கட்லா, ஜிலேப்பி, ரோகு, கெண்டை உள்ளிட்ட மீன்களை பிடித்து உற்சாகம் அடைந்தனர். பிடிக்கப்பட்ட மீன்களை வீட்டில் சமையல் செய்து சாப்பிட்டு மகிழ்ந்தனர்.

Related Tags :
மேலும் செய்திகள்