< Back
மாநில செய்திகள்
வாலிபரை தாக்கி செல்போன் பறிப்பு
மதுரை
மாநில செய்திகள்

வாலிபரை தாக்கி செல்போன் பறிப்பு

தினத்தந்தி
|
3 Jun 2023 7:07 PM GMT

மதுரையில், வாலிபரை தாக்கி செல்போன் பறிக்கப்பட்டது.

மதுரை,

மதுரை எஸ்.எஸ்.காலனி காளிமுத்து நகர் நேதாஜி தெருவை சேர்ந்தவர் பாண்டி (வயது 68). சம்பவத்தன்று இவர் பைபாஸ் ரோட்டில் உள்ள தனியார் செல்போன் நிறுவனத்திற்கு சென்றிருந்தார். அப்போது அங்கிருந்த 3 பேர் அவரது செல்போனை பறித்தனர். உடனே அவர் சத்தம் போட்டு அவர்களை பிடிக்க முயன்றார். அதில் 2 பேர் தப்பி செல்ல, ஒருவரை அங்கிருந்தவர்கள் சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அவரை எஸ்.எஸ்.காலனி போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவர் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த சுராஜ்குமார் (21) என்பது தெரியவந்தது. பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் தப்பி சென்ற 2 பேரை தேடி வருகிறார்கள்.

மதுரை ஜெய்ஹிந்த்புரம் சத்யசாய் நகர் குறிஞ்சி தெருவை சேர்ந்தவர் சின்னமணி (29). சம்பவத்தன்று இவர் ஜெய்ஹிந்த்புரம் மீனாம்பிகை நகரில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் 3 பேர் அந்த வழியாக வந்தனர். அவர்கள் திடீரென்று சின்னமணியை தாக்கி அவரிடமிருந்து செல்போன் மற்றும் 2 ஆயிரம் ரூபாயை பறித்து கொண்டு தப்பி விட்டனர். இது குறித்த புகாரின் பேரில் ஜெய்ஹிந்த்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்