< Back
மாநில செய்திகள்
விபத்தில் சிக்கிய வாலிபர் சாவு
பெரம்பலூர்
மாநில செய்திகள்

விபத்தில் சிக்கிய வாலிபர் சாவு

தினத்தந்தி
|
17 July 2023 6:46 PM GMT

விபத்தில் சிக்கிய வாலிபர் உயிரிழந்தார்.

குன்னம்:

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள கொட்டரை கிராமம் தெற்குத்தெருவை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் மணி(வயது 29). விவசாயி. இவர் தனது மோட்டார் சைக்களில் நேற்று முன்தினம் கொளக்காநத்தம் கிராமத்தில் இருந்து சாத்தனூர் கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளுடன் தவறி விழுந்ததில், அவருக்கு பலத்த அடிபட்டது. இதையடுத்து அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாலை அவர் உயிரிழந்தார். இது குறித்து அவரது மனைவி பிரியங்கா கொடுத்த புகாரின்பேரில் மருவத்தூர் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Tags :
மேலும் செய்திகள்