< Back
மாநில செய்திகள்
லாரி மோதி வாலிபர் சாவு
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

லாரி மோதி வாலிபர் சாவு

தினத்தந்தி
|
10 July 2022 4:48 PM GMT

பாலக்கோடு அருகே லாரி மோதி வாலிபர் இறந்தார்.

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி சத்திரம் தெருவை சேர்ந்தவர் முத்துராஜ். இவருடைய மகன் சங்கர் (வயது 25). இவர் சூளகிரி அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். நேற்று காலை அவர் மோட்டார் சைக்கிளில் ஊருக்கு சென்று கொண்டிருந்தார். ராயக்கோட்டையில் இருந்து பாலக்கோடு செல்லும் சாலையில் சென்ற போது அந்த வழியாக லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த சங்கரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ராயக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்