< Back
மாநில செய்திகள்
பாம்பு கடித்து பெண் பலி
வேலூர்
மாநில செய்திகள்

பாம்பு கடித்து பெண் பலி

தினத்தந்தி
|
2 Jun 2022 1:31 PM GMT

காட்பாடி அருகே பாம்பு கடித்து பெண் பலியானார்.

வேலூர்

காட்பாடி சிங்காரெட்டியூரை சேர்ந்தவர் சிவசங்கர் விவசாயி. இவரது மனைவி சாய்ராணி (வயது 31). இவர்களுக்கு ஒரு மகள், மகன் உள்ளனர். சாய்ராணி சம்பவத்தன்று கால்நடைகளுக்கு புற்கள் அறுக்க விவசாய நிலத்துக்கு சென்றார். அப்போது அவரை பாம்பு கடித்தது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து காட்பாடி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்