< Back
மாநில செய்திகள்
கோயம்புத்தூர்
மாநில செய்திகள்
படுகாயம் அடைந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி சாவு
|17 July 2023 8:15 PM GMT
படுகாயம் அடைந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி சாவு
நெகமம்
கிணத்துக்கடவை அடுத்த மாம்பள்ளி பகுதியை சேர்ந்தவர் கோகுல்(வயது 36). மனநலம் பாதிக்கப்பட்ட இவர், கடந்த 9-ந் தேதி நெகமம் நால்ரோட்டில் பழைய பஸ் நிலையம் அருகே நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக கார் ஒன்று அதிவேகமாக வந்தது. இதை கோகுல் கவனிக்காமல் சாலையை கடக்க முயன்றார். அப்போது கார் மோதி தூக்கி வீசப்பட்டார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை, அக்கம்பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் கோகுல் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.