< Back
மாநில செய்திகள்
தூத்துக்குடியில் பரபரப்பு.. பச்சை நிறத்தில் காட்சி அளித்த கடல்
மாநில செய்திகள்

தூத்துக்குடியில் பரபரப்பு.. பச்சை நிறத்தில் காட்சி அளித்த கடல்

தினத்தந்தி
|
16 Oct 2022 2:19 PM GMT

தூத்துக்குடியில் பச்சை நிறத்தில் கடல் காட்சி அளித்ததால் மக்கள் அச்சத்துடன் அருகே செல்லாமல் இருந்தனர்.

தூத்துக்குடி:

தூத்துக்குடியில் பொதுமக்கள் விடுமுறையை கொண்டாடுவதற்காக கடற்கரை பகுதிக்கு செல்வது வழக்கம். அதன்படி இன்று காலையில் மக்கள் புதிய துறைமுகம் கடற்கரை பூங்காவுக்கு சென்று உள்ளனர்.

அப்போது அந்த பகுதி கடல் முழுவதும் பச்சை நிறமாக காட்சி அளித்து உள்ளது. அதே நேரத்தில் அலையின் வேகமும் அதிகமாக இருந்து உள்ளது. இதனை பார்த்த மக்கள் அச்சத்துடன் கடலுக்கு அருகே செல்லாமல் இருந்து உள்ளனர்.

தூத்துக்குடியில் வழக்கத்துக்கு மாறாக கடல் நீர் பச்சை நிறத்தில் காட்சியளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து மீனவர்கள் கூறும் போது, கடலில் ஏற்படும் தட்பவெப்ப நிலை மாற்றங்களாலோ, அல்லது பாசியாலோ ஏற்படலாம் என்று கூறினர்.


மேலும் செய்திகள்