< Back
மாநில செய்திகள்
வீட்டின் மேற்கூரை இடிந்து 4 பேர் காயம்
பெரம்பலூர்
மாநில செய்திகள்

வீட்டின் மேற்கூரை இடிந்து 4 பேர் காயம்

தினத்தந்தி
|
5 Jan 2023 6:48 PM GMT

வேப்பந்தட்டை அருகே வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 4 பேர் காயம் அடைந்தனர்.

விவசாயி

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள அன்னமங்கலம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 41), விவசாயி. இவர் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு அரசு வழங்கிய தொகுப்பு வீட்டில் வசித்து வந்தார்.

நேற்று செந்தில்குமார், தனது மனைவி காமாட்சி, உறவினர்கள் அரசலூரை சேர்ந்த கண்ணன், சங்கர் ஆகிய 4 பேரும் வீட்டில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.

4 பேர் காயம்

அப்போது வீட்டின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. இதில், 4 பேரும் காயமடைந்தனர். பின்னர் அவர்களை அருகே இருந்தவர்கள் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக அரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்