< Back
மாநில செய்திகள்
ஓசி பிரியாணி கேட்டு ஓட்டலை சூறையாடிய ரவுடி
சென்னை
மாநில செய்திகள்

ஓசி பிரியாணி கேட்டு ஓட்டலை சூறையாடிய ரவுடி

தினத்தந்தி
|
17 Aug 2023 8:34 AM GMT

சென்னை,

சென்னை சூளைமேடு பெரியார் பாதையை சேர்ந்தவர் அருண்குமார். இவர், கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் 2-வது தெருவில் பிரியாணி கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு நேற்று முன்தினம் இரவு மது போதையில் வந்த வாலிபர் ஒருவர், ஓசியில் பிரியாணி பார்சல் தருமாறு கேட்டார். அதற்கு கடையில் இருந்த அருண்குமார், பணம் கொடுத்துவிட்டு பிரியாணி பார்சல் வாங்கிச் செல்லுமாறு கூறினார்.

இதில், இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த போதை வாலிபர், பிரியாணி பாத்திரத்தை எட்டி உதைத்தார். மேலும், கடையில் இருந்த பொருட்களை அடித்து உடைத்து ரகளையில் ஈடுபட்டார். இதை பார்த்ததும், கடையில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். பின்னர் போதை ஆசாமி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு கோடம்பாக்கம் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவையும் ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில், போதையில் கடையை சூறையாடிய ஆசாமி, அதே பகுதியில் ரவுடியாக வலம்வரும் கோவிந்தராஜ் என்பது தெரியவந்தது. அவரை போலீசார் தேடி வருகின்றனர். அவர் மீது ஏற்கனவே, கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்