< Back
மாநில செய்திகள்
மின்வாரிய அதிகாரி மர்மச்சாவு-வைகை ஆறு பகுதியில் பிணமாக கிடந்தார்
மதுரை
மாநில செய்திகள்

மின்வாரிய அதிகாரி மர்மச்சாவு-வைகை ஆறு பகுதியில் பிணமாக கிடந்தார்

தினத்தந்தி
|
3 Sep 2023 8:50 PM GMT

மின்வாரிய அதிகாரி மர்மமான முறையில் வைகை ஆற்று பகுதியில் பிணமாக கிடந்தார்

மதுரை ஆரப்பாளையம் வைகை வடகரை அம்மா பாலப்பகுதியில் மர்மமான முறையில் ஒருவர் இறந்து கிடப்பதாக செல்லூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து போலீசார் அங்கு சென்று விசாரித்தபோது, இறந்து கிடந்தவர் ஆரப்பாளையம் மோதிலால் தெருவை சேர்ந்த பாலமுருகன் (வயது 51) என்பதும், அவர் கொடைக்கானல் அருகே உள்ள ஒரு கிராமத்தில் மின்வாரிய அலுவலகத்தில் அதிகாரியாக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.

இதனை தொடர்ந்து, அவரது உடலை மீட்ட போலீசார் பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக அவரது மனைவி நாகராணி, செல்லூர் போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பாலமுருகன் சாவுக்கு காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்