< Back
மாநில செய்திகள்
அமைச்சர் அனிதா ராதகிருஷ்ணனுக்கு எதிராக அமலாக்கத்துறை தொடர்ந்த மனு அடுத்த மாதம் 2ம் தேதிக்கு ஒத்திவைப்பு..!
மாநில செய்திகள்

அமைச்சர் அனிதா ராதகிருஷ்ணனுக்கு எதிராக அமலாக்கத்துறை தொடர்ந்த மனு அடுத்த மாதம் 2ம் தேதிக்கு ஒத்திவைப்பு..!

தினத்தந்தி
|
19 July 2023 7:48 AM GMT

அமைச்சர் அனிதா ராதகிருஷ்ணனுக்கு எதிராக அமலாக்கத்துறை தொடர்ந்த மனு அடுத்த மாதம் 2ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி,

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் 2001-2006 அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த போது வருமானத்திற்கு அதிகமான ரூ.4 கோடியே 90 லட்சம் சொத்து சேர்த்ததாக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு தொடர்ந்தது. இந்த சொத்துக்குவிப்பு வழக்கைத் தூத்துக்குடி நீதிமன்றம் விசாரித்துவருகிறது.

வழக்கில் 80 சதவிகிதம் விசாரணை முடிந்த நிலையில் தங்களையும் இணைக்கக் கோரி ஏப்ரல் 18ல் தூத்துக்குடி நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனுத் தாக்கல் செய்தது. இந்த வழக்கை ஜூலை 19 ஆம் தேதிக்கு தூத்துக்குடி நீதிமன்றம் ஒத்திவைத்தது.

அதன்படி அமைச்சர் ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அதற்காக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது மகன்கள் நீதிமன்றத்தில் ஆஜராகினர். அமலாக்கத்துறை கோரிய மனு மீது தூத்துக்குடி நீதிமன்றம் இன்று என்ன முடிவு எடுக்கப்போகிறது என எதிர்பார்ப்பு எழுந்த நிலையில் வழக்கை அடுத்த மாதம் 2ஆம் தேதிக்கு தூத்துக்குடி நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

மேலும் செய்திகள்