< Back
மாநில செய்திகள்
புதுக்கடை அருகே திருமண வீட்டிற்கு சென்றவர் மர்ம சாவு
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

புதுக்கடை அருகே திருமண வீட்டிற்கு சென்றவர் மர்ம சாவு

தினத்தந்தி
|
30 May 2023 10:05 PM GMT

புதுக்கடை அருகே திருமண வீட்டிற்கு சென்றவர் மர்மமான முறையில் வயல்வெளி குட்டையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

புதுக்கடை:

புதுக்கடை அருகே திருமண வீட்டிற்கு சென்றவர் மர்மமான முறையில் வயல்வெளி குட்டையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நண்பரின் திருமணத்துக்கு சென்றவர்

புதுக்கடை அருகே உள்ள காஞ்சாம்புரம் பகுதியை சேர்ந்தவர் பாலஸ். இவரது மகன் ஜெய்சிங் (வயது27), சமையல் வேலை செய்து வந்தார். இவர் நேற்று முன்தினம் புதுக்கடை அருகே உள்ள அம்சி பகுதியில் உள்ள ஒரு நண்பரின் திருமண வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. அவரை உறவினர்கள் பல இடங்களில் தேடி வந்தனர்.

இந்தநிலையில் அதே பகுதியில் வயல் பகுதியில் ஒரு குட்டையில் ஜெய்சிங் பிணமாக கிடந்தார். அவர் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் வயல் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டனர். தொடர்ந்து உடலை புதுக்கடை போலீசார் கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணை

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெய் சிங் எப்படி இறந்தார்? அவரது சாவுக்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருமண வீட்டுக்கு சென்றவர் மர்மமான முறையில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்