< Back
மாநில செய்திகள்
பஸ்சில் ஏறியபோது தவறி விழுந்து காயம் அடைந்தவர் சாவு
தென்காசி
மாநில செய்திகள்

பஸ்சில் ஏறியபோது தவறி விழுந்து காயம் அடைந்தவர் சாவு

தினத்தந்தி
|
1 July 2023 8:13 PM GMT

கடையத்தில் பஸ்சில் ஏறியபோது தவறி விழுந்து காயம் அடைந்தவர் பரிதாபமாக இறந்தார்.

கடையம்:

விக்கிரமசிங்கபுரம் அம்பலவாணபுரம் நாராயணசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் வாசு (வயது 47). இவருடைய மனைவி சுப்புலட்சுமி. இவர் பள்ளக்கால் பொதுக்குடியில் உள்ள பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் வாசு கடந்த 29-ந்தேதி செங்கோட்டையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்்து கொள்வதற்காக உறவினர்களுடன் விக்கிரமசிங்கபுரத்தில் இருந்து பஸ்சில் பயணம் செய்தார்.

கடையம் பஸ் நிலையத்தில் பஸ் நின்றபோது தண்ணீர் பாட்டில் வாங்குவதற்காக வாசு கீழே இறங்கி சென்றார். அவர் வருவதற்குள் பஸ் புறப்பட்டது. இதனால் அவர் ஓடி சென்று பஸ்சில் ஏற முயன்றார். அப்போது அவர் தவறி விழுந்து காயம் அடைந்தார். உடனடியாக அவரை தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்த்து, பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வாசு நேற்று காலை பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கடையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்