< Back
மாநில செய்திகள்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்
பஸ் நிலையத்தில் தவறி விழுந்தவர் சாவு
|25 Sep 2023 6:57 PM GMT
பஸ் நிலையத்தில் தவறி விழுந்தவர் பரிதாபமாக இறந்தார்.
ஆலங்குடியை சேர்ந்தவர் சண்முகம் (வயது 40). இவர் சம்பவத்தன்று புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் காத்திருப்பு அறையில் இருக்கையில் இருந்து தவறி கீழே விழுந்ததில் படுகாயமடைந்தார். இதையடுத்து அவரை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சண்முகம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.