< Back
மாநில செய்திகள்
விவசாயியை திட்டியவர் கைது
அரியலூர்
மாநில செய்திகள்

விவசாயியை திட்டியவர் கைது

தினத்தந்தி
|
29 Sep 2023 6:25 PM GMT

விவசாயியை திட்டியவரை போலீசார் கைது செய்தனர்.

அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே ஸ்ரீபுரந்தான் கீழத் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 66). விவசாயியான இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த பாண்டியன்(48) என்பவருக்கும் இடையே கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக முன்விரோதம் இருந்துள்ளது. இதில் சம்பவத்தன்று இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பாண்டியன், ராஜேந்திரனை திட்டி உள்ளார். இதுகுறித்து விக்கிரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாண்டியனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்