< Back
மாநில செய்திகள்
மூதாட்டி உடல் பிரேத பரிசோதனை முடிந்து உறவினர்களிடம் ஒப்படைப்பு
அரியலூர்
மாநில செய்திகள்

மூதாட்டி உடல் பிரேத பரிசோதனை முடிந்து உறவினர்களிடம் ஒப்படைப்பு

தினத்தந்தி
|
22 Jun 2023 7:25 PM GMT

மூதாட்டி உடல் பிரேத பரிசோதனை முடிந்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஆலத்தூர் தாலுகா, கொளத்தூர் காலனி தெருவை சேர்ந்த முத்துசாமியின் மனைவி மாரியம்மாள் (வயது 63). இவரை கடந்த 15-ந்தேதி முதல் காணவில்லை என்று, கடந்த 18-ந்தேதி மருவத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் பெறப்பட்டு வழக்குப்பதிவு செய்த போலீசார் மாரியம்மாளை தேடி வந்தனர். அன்றைய தினம் மாரியம்மாள் ஆதார் அட்டையில் திருத்தம் மேற்கொள்வதற்காக ஆலத்தூர் தாலுகா அலுவலகத்துக்கு செல்வதற்காக ஒரு வாலிபருடன் மோட்டார் சைக்கிளில் சென்றது அந்தப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது. அதன்பிறகு மாரியம்மாளையும், அந்த வாலிபரையும் காணவில்லை.

இந்த நிலையில் கடந்த 20-ந்தேதி மாரியம்மாள் கொளக்காநத்தம் ஓடை அருகே உடல் எரிந்த நிலையில் போலீசாரால் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் பிரேத கூடத்தில் வைக்கப்பட்டது. பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக மருவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மாரியம்மாளின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் நகைக்காக அந்த வாலிபர் மூதாட்டியை கொலை செய்து தீயிட்டு எரித்திருக்கலாம் என்றும், அந்த வாலிபரை கைது செய்யும் வரை மாரியம்மாளின் உடலை வாங்க மாட்டோம் என்றும், போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கூறியிருந்தனர்.

இந்த நிலையில் போலீசார் முதலில் மாரியம்மாளின் உடலை பிரேத பரிசோதனை செய்து, உடலை பெற்று செல்லுங்கள். இந்த சம்பவம் தொடர்பாக அந்த வாலிபரை பிடிக்க போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவரை கைது செய்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறவினர்களிடம் தெரிவித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் நேற்று மாலை மாரியம்மாளின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் மாரியம்மாளின் உடலை, அவரது உறவினர்கள் பெரம்பலூர் நகராட்சி மின் மயானத்தில் எரியூட்டி சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக அந்த வாலிபரின் தந்தை, தாய், தம்பி ஆகிய 3 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்