< Back
மாநில செய்திகள்
தவறி விழுந்த மூதாட்டி சாவு
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

தவறி விழுந்த மூதாட்டி சாவு

தினத்தந்தி
|
20 Jun 2023 6:45 PM GMT

தியாகதுருகம் அருகே தவறி விழுந்த மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.

தியாகதுருகம்,

தியாகதுருகம் அருகே நாகலூர் கிராமத்தை சேர்ந்தவர் வரதன் மனைவி சீதா (வயது 60) கூலி தொழிலாளி. இவர் சம்பவத்தன்று தனது வீட்டில் தவறி விழுந்தார் இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்