< Back
மாநில செய்திகள்
மயங்கி கிடந்த முதியவர் சாவு
பெரம்பலூர்
மாநில செய்திகள்

மயங்கி கிடந்த முதியவர் சாவு

தினத்தந்தி
|
12 Aug 2023 8:05 PM GMT

மயங்கி கிடந்த முதியவர் பரிதாபமாக இறந்தார்.

பெரம்பலூர்-துறையூர் புறவழிச்சாலையில் சொக்கநாதபுரம் பிரிவு சாலையில் நேற்று முன்தினம் இரவு 65 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் மயங்கி கிடந்தார். இதனை கண்ட அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்சில் ஏற்றி சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடல் மருத்துவமனை பிரேத கூடத்தில் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தினர். இறந்து போன நபர் கடந்த 10-ந்தேதி குன்னம் தாலுகா, லெப்பைக்குடி காட்டில் மயங்கி கிடந்துள்ளார். அங்கு இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்சில் ஏற்றி அனுப்பி வைத்தனர். சிகிச்சையில் இருந்தவர் நேற்று முன்தினம் அதிகாலை யாரிடமும் சொல்லாமல் மருத்துவமனையை விட்டு வெளியே சென்று விட்டார். இந்த நிலையில் சொக்கநாதபுரம் பிரிவு சாலையில் அவர் மயங்கி கிடந்ததும், பின்னர் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்த போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. மேலும் அவர் யார்? எந்த ஊரை சோ்ந்தவர்? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்