< Back
மாநில செய்திகள்
கரூர்
மாநில செய்திகள்
முதியவர் சாவு
|25 Jun 2023 6:49 PM GMT
மயங்கி விழுந்து முதியவர் பரிதாபமாக இறந்தார்.
நாமக்கல் பகுதியை சேர்ந்தவர் கருப்பையா (வயது 65). இவர் கரூர் பசுபதிபுரத்தில் உள்ள வேம்பு மாரியம்மன் கோவில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது கருப்பையா திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கருப்பையா பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து கரூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சங்கரன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.