< Back
மாநில செய்திகள்
முதியவர் சாவு
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

முதியவர் சாவு

தினத்தந்தி
|
17 Sep 2023 7:58 PM GMT

திருவோணம் அருகே சுற்றுலா வேன் மோதி முதியவர் இறந்தார்.

திருவோணத்தை அடுத்துள்ள பில்லுவெட்டுவிடுதி தெற்கு தெருவை சேர்ந்தவர் சிங்காரம்பிள்ளை (வயது77). நேற்று மாலை இவர் பட்டுக்கோட்டை-கந்தர்வக்கோட்டை சாலையில் மூவர் ரோடு அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அதே சாலையில் வந்த ஒரு சுற்றுலா வேன் சிங்காரம்பிள்ளை மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருவோணம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து சிங்காரம்பிள்ளையின் மகன் சாமிக்கண்ணு கொடுத்த புகாரின் பேரில் திருவோணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்