< Back
மாநில செய்திகள்
புதுப்பெண் திடீர் சாவு
விருதுநகர்
மாநில செய்திகள்

புதுப்பெண் திடீர் சாவு

தினத்தந்தி
|
21 July 2023 7:15 PM GMT

ராஜபாளையத்தில் புதுப்பெண் திடீரென இறந்தார்.

ராஜபாளையம்,

ராஜபாளையம் அருகே உள்ள அய்யனாபுரம் பகுதியை சேர்ந்த நடராஜன் மகள் ராஜ சுகந்தி (வயது 20). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வேல்சாமி மகன் சுரேஷ் குமார் என்பவருக்கும் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்தநிலையில் ராஜசுகந்திக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அப்போது திடீரென வயிற்று வலி அதிகமானதால் அவரை விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர், ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக கூறினார். இதுகுறித்து நடராஜன் கீழ ராஜகுலராமன் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்