< Back
மாநில செய்திகள்
ஊரணியில் மூழ்கி வியாபாரி சாவு
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

ஊரணியில் மூழ்கி வியாபாரி சாவு

தினத்தந்தி
|
5 Aug 2023 5:43 PM GMT

ஊரணியில் மூழ்கி வியாபாரி இறந்தார்.

புதுக்கோட்டை மாவட்டம், கடையக்குடி ஊராட்சி கணக்கம்பட்டியை சேர்ந்தவர் சோலை (வயது 50). வெள்ளரிக்காய் வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு வலிப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று காலை கீழகொத்தக்கோட்டையில் உள்ள முக்கன் ஊரணியில் சோலை குளிக்க சென்றுள்ளார். அப்போது ஊரணியில் குளித்த போது நீரில் மூழ்கி சோலை இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த ஆலங்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சோலை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்